நம்மாழ்வார் 🞸 103
இறைவனின் இறப்ப உயர்ந்த தன்மையை நன்கு அறிந்திருந்த இப்பெருமக்கள் தம் சிறுமையையும் ஓயாமல் அகற்றுவதோடு நில்லாமல் அவனைக் காண வேண்டும் என்னும் தம் தாபத்தையும் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தனர்.
‘சீலம் இல்லாச் சிறியனேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா!
காலந்தோறும் யான் இருந்த, கைதலைப் பூசல் இட்டால், கோலமேனி காணவாராய்; கூவியும் கொள்ளாயே’
‘அடியேன் சிறிய ஞானத்தன்; அறிதல் யார்க்கும்
கடிசேர் தண்ணந் துழாய்க் கண்ணி, புனைந்தான்
செடியார் ஆக்கை, அடியாரைச் சேர்தல் தீர்க்கும்
அடியேன் காண்பான் அலற்றுவன்; இதனில் மிக்கு
என்றெல்லாம் நம்மாழ்வார் பாடுகின்றமை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் நம் விருப்பம் எல்லாம் நிறைவேறி விட வேண்டும் என்று நினைக்கும் மந்த மதிகட்கு ஒரு நல்ல பாடமாகும்.
பல்காலும் அரற்றியும் இறைவன் திருவருள் கிட்டாதபொழுதும் இவர்கள் அவனையோ அவன் கருணையையோ குறை கூறுவதில்லை. அதன் மறுதலையாகத் தம் பிழையையே நினைத்து வருந்துவார்கள்.