இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142 * அருளாளர்கள்
தமிழ்ப் பாடல் என்ற முறையிலே அதன் சுவையைக் கருதிப் படித்தாலும், சர்க்கரை பூசப்பட்ட மருந்து உள்ளே சென்று பயன் தருவது போன்று திருவிளையாடல் புராணத்தை அதனுடைய கவிதைச் சுவைக்காகப் படித்தாலும் பெரும்பயனை விளைவிக்குமென்பதை அறிய முடிகிறது. தமிழ்ப் புலவர் பரம்பரையிலே தமிழுக்குத் தொண்டு செய்த பெரும் புலவர்களில் பரஞ்சோதி முனிவரும் ஒருவராக விளங்குகிறார்.