பக்கம்:அருளாளர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சைவ சமயத்தில் ஒளி வழிபாடு .149

“ஒளியை யறியில் உருவும் ஒளியும்

ஒளியும் உருவம் அறியில் உருவாம்

ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந்தானே"

(திருமுறை : 10, 2681)

“விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள"

(திருமுறை : 10,2683)

“மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி

பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி"

(திருமுறை : 10,2686)

“விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து

துளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்"

(திருமுறை : 10,2687)

“விளங்கொளி யவ்வொளி யவ்விருள் மன்னுள்

துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்"

(திருமுறை : 10,2688)

“இலங்கிய தெவ்வொளி யவ்வொளி யீசன்

துலங்கொளி போல்வது தூங்களும் சத்தி"

(திருமுறை 10,2689)

“உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன்

வளங்கொளியா நின்ற மாமணிச் சோதி"

(திருமுறை : 10,2690)

“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது

பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/160&oldid=1291908" இலிருந்து மீள்விக்கப்பட்டது