இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சைவ சமயத்தில் ஒளி வழிபாடு .149
“ஒளியை யறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந்தானே"
(திருமுறை : 10, 2681)
“விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள"
(திருமுறை : 10,2683)
“மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி"
(திருமுறை : 10,2686)
“விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்"
(திருமுறை : 10,2687)
“விளங்கொளி யவ்வொளி யவ்விருள் மன்னுள்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்"
(திருமுறை : 10,2688)
“இலங்கிய தெவ்வொளி யவ்வொளி யீசன்
துலங்கொளி போல்வது தூங்களும் சத்தி"
(திருமுறை 10,2689)
“உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன்
வளங்கொளியா நின்ற மாமணிச் சோதி"
(திருமுறை : 10,2690)
“உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில்