பக்கம்:அருளாளர்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்த யோகசுவாமிகள் *235

படைத்து விட்டு அந்த உச்சிஷ்டத்தை நாங்கள் உண்ணவேண்டு மென்று விரும்பினார். அமைச்சர் நடேசனாரிடம் இதைச் சொல்ல அவர் சமையற்காரனை அழைத்து, “ஏழு அல்லது எட்டுமணிக்கு குளித்துச் சுத்தமாக இடியப்பமும் சொதியும் தயார் செய்து வை" என்று உத்தரவிட்டார். மகாதேவனிடம் திரும்பி, “உங்கள் ஆசைக்காக இதனைச் செய்யச் சொல்லி விட்டேன். சுவாமிகள் எதையும் வாயிற் போட்டு நானறியேன். இருந்தாலும் இப்பலகாரத்தை எடுத்துக் கொண்டு சென்று உங்கள் விருப்பத்தை விண்ணப்பம் செய்யுங்கள். சுவாமிகள் மறுத்துவிட்டால் அதற்காக வருந்தவேண்டாம்’ என்று கூறினார் நடேசனார்.

திடீரென்று ஒர் அதிசயம் நிகழ்ந்தது. நான்கு மணிக்கு அமைச்சர் உட்பட நாங்கள் நால்வரும் கல்லூரிக்குப் புறப்படத் தயாராக இருந்தோம். சமையற்காரனுக்கு திடீரென்று காக்கைவலி கண்டுவிட்டது. அவனை மருத்துவமனைஅனுப்பிவிட்டு நாங்கள் சொற்பொழிவுக்குச் சென்று விட்டோம். எங்களுக்கே உணவில்லாத போது சுவாமிகளுக்கு நைவேத்தியம் கொண்டு செல்வதென்பது நடக்காமல் போய்விட்டது. எங்களுக்குக் கொடுத்துவைக்க வில்லை என்ற மனவருத்தத்துடன் பத்துமணியளவில் நாங்கள் மூவரும் சுவாமிகளிடம் சென்று வீழ்ந்து வணங்கி விட்டு நின்றோம். திடீரென்று சுவாமிகள் “அடே மகாதேவா! யோகனுக்குச் சாப்பாடு போடவேண்டு மென்று நினைத்தாயல்லவா? கவலைப்படாதே"என்று கூறிவிட்டு மூவரையும் அமருமாறு செய்தார்கள். திடீரென்று குடிசையில் ஒரு மூலையைச் சுட்டிக் காட்டி, “டேய் பொடியா! அங்கே இடியப்பமும் சொதியும் இருக்கிறது. நான்கு இலைகள் இருக்கின்றன எடுத்துப் போடு” என்றார்கள். சுவாமிகளுக்குப் படைக்கப்பட்ட இலையில் இருந்த இடியப்பத்தை நன்கு பிசைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/246&oldid=1292047" இலிருந்து மீள்விக்கப்பட்டது