பக்கம்:அருளாளர்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 * அருளாளர்கள்



பிறரிடம் இது பற்றிப் பேசத் தேவையில்லை. ஒருமுறை யாழ்ப்பாணம் சென்று சுவாமிகளைத் தரிசித்த பொழுது சிரித்துக் கொண்டே மகனே சிவனொளி பாதம் போய் வரலாமோ என்று கேட்டார். நான் கொஞ்சம் அஞ்சினேன். மலையின் மேலிருக்கும் அந்த இடத்திற்கு செல்வதற்கு சரியான பாதையொன்றும் அப்பொழுது இல்லை. பாறைகளைக் கடந்து தாண்டிக் கொண்டு செல்லவேண்டும். சுவாமிகளோ முதிர்ந்த பருவத்தினர். என்ன செய்வது என்று திகைத்து இறுதியில் ஒப்புக் கொண்டேன். அந்த மலையின்மேல் ஏறிச் செல்வதானால் போகவரவே பல மணிகள் ஆகும். வழியில் சாப்பிடுவதற்கு ஒன்றும் இராது. எனவே சுவாமிகள் குறித்த நாளில் ஒரு சட்டி நிறைய இடியப்பமும் சொதியும் தயார்செய்து காரின் பின்புறம் வைத்துவிட்டு சுவாமிகளும் நானும் மலையடிவாரம் போய்ச் சேர்ந்தோம். அங்கே காரில் இருந்து இறக்கிய இரண்டு பாத்திரங்களையும் பார்த்து ‘என்ன மகனே இது என்று கேட்டார்கள். மதிய உணவிற்காக என்று நான் கூறியவுடன் கடகடவென்று சிரித்த சுவாமிகள் போகும் வழியில் பாதி தூரத்தில் அழகான டிக்கடை இருக்கிறது. வேண்டுமான பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாம்; டீ குடிக்கலாம்’ என்றார்கள். எனக்கு தலை சுற்றியது. ஒரு மாதம் முழுவதும் ஏதோ இரண்டொருவர் தவிர வேறு யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. அந்த வழியில் யாரை நம்பி எந்தப் பைத்தியக்காரன் டீக்கடை வைத்திருப்பான் என்று நான் நினைத்தாலும் சுவாமி களிடம் எடுத்துச் சொல்லும் துணிவு எனக்கு இல்லை. ஆனாலும் சுவாமிகள் நான் கொண்டுவந்த உணவை வண்டியிலேயே வைத்து விடுமாறு பணித்தார்கள். வேறு வழியில்லாமல் அரைமனத்துடன் வண்டியிலேயே உணவை வைத்துவிட்டு இருவரும் மலையேறினோம். பாதிவழி சென்றதும் ஓர் அதிசயக் காட்சி, என்னென்று சொல்வது? பாண், ரொட்டி, பலகாரங்கள் இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/257&oldid=1285888" இலிருந்து மீள்விக்கப்பட்டது