பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு-2

தமிழ்மாமுனிவர் அருள்நெறித்தந்தைதவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கைக் குறிப்புகள்

ஆண்டு நிகழ்வுகள்

1925 தோற்றம் பூர்வாசிரமம்: தந்தையார்:திரு. சீனிவாசம்பிள்ளை தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி பிள்ளைத்திருநாமம்:அரங்கநாதன் தோற்றம் பெற்ற ஊர்:தஞ்சை மாவட்டம் திருவாளப்புத்துர் அருகேயுள்ளநடுத்திட்டுக் கிராமம்.

1931 – 36 சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம். சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.

193ー42 தமையனார்திரு.கோபாலகிருஷ்ணபிள்ளைவீட்டில் கடியாபட்டியில் வாழ்தல்.

1942 பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல். 1942விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு. "வினோபாவே படிப்பகம்”தொடங்கிநடத்துதல்.

1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதான்ம் கயிலைக்குருமணி அவர்களிடம் கந்தசாமித்தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல். தருமபுரம் ஆதீனம் தமிழ்க்கல்லூரியில் பயிலுதல்.

1947 ー48 சீர்காழிக் கட்டளைத்தம்பிரான்-திருஞானசம்பந்தர் திருமடம் தூய்மைப்பணி:திருமுறைவகுப்பு, விழா நடத்துதல்.

1949 குன்றக்குடித்திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு