பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு - 2

தமிழ்மாமுனிவர் அருள்நெறித்தந்தைதவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்


ஆண்டு  நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம்: தந்தையார்: திரு. சீனிவாசம்பிள்ளை
தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம்: அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர்: தஞ்சை மாவட்டம்
திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931–36 சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937ー42 தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை வீட்டில் கடியாபட்டியில் வாழ்தல்.
1942 பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு. "வினோபாவே படிப்பகம்” தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம்
கயிலைக்குருமணி அவர்களிடம் கந்தசாமித்தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் ஆதீனம் தமிழ்க்கல்லூரியில் பயிலுதல்.
1947-48 சீர்காழிக் கட்டளைத்தம்பிரான்-திருஞானசம்பந்தர் திருமடம் தூய்மைப்பணி: திருமுறைவகுப்பு, விழா நடத்துதல்.
1949 1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு