பக்கம்:அரை மனிதன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அரை மனிதன்


ளிடத்தில்பாசம் இருந்தது. உறவு முறிய ஆரம்பித்தது. அந்தக் கண்ணீரே அவளுக்கு உண்மையைக் காணத் தடையாக அமைந்து விட்டது. நான் என் நெஞ்சை அலசிப் பார்க்கிறேன். அவளிடம் இந்த முரண்பாடு ஏற்பட்டதால்தான் அவளிடம் என் உறவு கொஞ்சம் விலக ஆரம்பித்திருக்கிறது. அவளை உடனே என் தங்கை என்று வாயால் சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்காகத்தான் அவள் வருந்தி இருக்கிறாள்.

ரங்கன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அறுப்புக்காரக் கந்தன் தனக்கு ஒரு போட்டியாக அமைவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் அவள் மீது யாரும் கை வைக்க இடம் இல்லாமல் போய் விட்டது. இந்தக் கீழ் மட்டத்து மக்கள் இப்படி எதற்கும் சண்டைப் போட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. இவர்களை மோதவிட்டுப் பணவசதி உடையவன் எதையும் சாதித்து விடுகிறான். இவர்கள் என்னதான் பாடுபட்டாலும் அவளுக்கு ஒரு நெக்லஸ் கொண்டு வந்துதர முடியாது. அது என் தம்பியால்தான் தர முடிந்தது. அரசியல் வாதிகளை எப்படிப் பணக்காரர்கள் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ள முடிந்தது.

அவனுக்கு இவள் என்ன பதில் சொல்லப் போகிறாள். அது அவன் அவளுக்குக் கொடுத்ததாக அவள் வாய் விட்டுப் பேசவில்லை. அவன் கொண்டு வந்து கொடுத்தான் என்பது அவளுக்கு நாகரிகமாகத் தெரியவில்லை. ரங்கன் கொடுத்திருந்தால் அதில் அவளுக்குப் பெருமை. அதிலே வீரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல; என்னை அறிவதற்காக அவள் முயற்சி செய்தாள் என்பது அர்த்தம். ரங்கன் கொண்டு வந்து கொடுத்தான் என்ன சொல்கிறாய் என்பது அவள் கேள்வி.

அவளுக்கும் அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தால்தான் கொடுத்து இருக்கிறாள். மேல் மட்டத்து ஆள் இப்படி அழிவதை அவள் வெறுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/84&oldid=1461981" இலிருந்து மீள்விக்கப்பட்டது