பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14.விளையாட்டு வழி காட்டுகிறது


விளையாட்டு எல்லோராலும் விரும்பப்படுகிறது. என்றும் வாழ்விற்கு வழிகாட்டுகிறது. விளையாட்டில் பங்கு பெறும் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றார்கள். விளையாடும் போது, சோதனைகளைச் சமாளித்து சாதனை புரியும் வெற்றியும் பெறுகின்றார்கள். விளையாட்டை ஒருவர் திட்டமிட்டு, வல்லுநரின் மேற்பார்வையில் விளையாடினாலும் அல்லது தன்விருப்பம் போல் விளையாடினாலும். தன்னை விரு பி வந்தவர்களை விரும்பி ஏற்றுக்கொள்கிறது விளையாட்டு

ஆதிகால மனிதர்கள் ஒய்வு நேரத்தில் விளையாட ஆரம்பித்தாலும், அந்தப்பயிற்சியே அவர்களின் வாழ்வுப் போராட்டம் வெற்றிபெற வழிகாட்டி நின்றது காட்டு மனிதர்கள் சமுதாயமாகி. நாடுகளுக்குள் தலைமை வெறி ஏற்பட்ட போது போர்கள் உண்டாயின. அது சமயம் தான் போர்வீரர்கள், வீரஉணர்வு பெறவும், தாக்கும்திறன் போன்ற உயிற்சிகள் எல்லாம் விளையாட்டு வடிவத்திலேயேதிகழ்ந்தன.

அப்படிப்பட்ட நேரத்தில் உருவாகிய விளையாட்டுக்கள் தான், தட்டெறிதல், வேலெறிதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் கத்திச்சண்டை, குதிரையேற்றம் முதலியன.

போருக்கு உதவிய தாக்கும் முறைகளே மேன்மை பெற்று, சுறுசுறுப்புடன் வாழவேண்டும் என்பதற்காக விளையாட்டு நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றன. எப்படி? என்பதை இனி நான் காண்போம்.

1. வலிமையான உடலை வளர்க்கிறது.

வலிமையான உடல் தான் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடி ப்படையாகும். வலிமை என்பது இயற்கையாகவே, முயற்சி இல்லாத சோம்பல் தனத்தாலே வந்துவிடாது.