பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


ஏறுதல், இறங்குதல், தூக்குதல், எறிதல், பிடித்தல்,தாக்குதல் போன்றவையாகும். இந்தச் செயல்கள் சரிவர தடைபெறாத போது தான் சரிவர காரியங்கள் நடைபெறாது சரிவடைகின்றன.

தரமாக மாறும்போது, திறமும் தேர்ச்சியும் பெருகும். இவற்றை எப்படி வளர்ப்பது? இவற்றை எளிதாக வளர்க்கும் இடம் தான் விளையாட்டுகள், விளையாட்டுக்களின் அடிப் படை இயக்கங்களும் மனிதர்களது அடிப்படை இயக்கங்களும் ஒன்று தானே!

அதனால் தான், விளையாட்டில் ஈடுபடும் அனைவரும் எளிதாக இயங்க, அழகாக செயல்படும் ஆற்றல் மிகுந்தவர்கனாகவும், அனைவரையும் கவர்கின்ற அற்புதத்திறன் மிக்கவர் கனாகவும் விலங்குகின்றார்கள்.

33 சமுதாயப் பண்புகள் செழிக்கின்றன.

"நான்’ என்ற அகந்தை வேண்டாம். அது அழித்துவிடும். "நாம் என்று நடப்போம். அது சக்தியைப் பெருக்கும் என்று. அறிவுரை கூறுவார்கள் ஆன்றோர்கள். அவற்றை வழி நடத் தும் வளமான களமாக விளங்குவது விளையாட்டாகும்.

கூடி சேர்ந்து ஆடுவதுதான் விளையாட்டு. எல்லோரும் ஒன்று தான், ஒருவர்தான் எல்லோரும்' என்ற மனப்பாங்கு விளையாட்டில் அமைந்தால் தான் விளையாடவே முடியும். பிறகு வெற்றி பெறமுடியும்.

ஆகவே, சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கவும், சுய நலத்தைப் போக்கவும், சமுதாய உணர்வை மேம்படுத்தவும், ஒழுக்கத்துடன் மற்றவர்களுடன் பழகவும் : பண்பாட்டுடன்மிளிரவும் விளையாட்டுக்களே செம்மை செய்கின்றன, உண்மைதானே?