பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



103


4. அறிவும் ஆனந்தமும் உச்சநிலை அடைகின்றன.

'உன்னை அறிந்து கொள்' என்று போதித்தான் பேரறிஞன் சாக்ரட்டீஸ். 'தன்னை அறிந்தவன் தலைவன் என்கிறது நீதிப்பாடல் ஒன்று.

தன் நிலையையும், தன் தகுதியையும், தனக்குரிய வாய்ப்புக்களையும், அதை நிறைவேற்ற தனக்குரிய சாதக மான சூழ்நிலையையும் சக்தியையும் உணர்கின்ற ஒருவனால் தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும்.

தனக்கு என்ன திறமை; தன்னை மற்றவர்கள் எப்படி மதிக்கிறார்கள், என்பதை விளையாட்டில் மிக எளிதாகக் கண்டு கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் விளை யாட்டில் அதிகம் உண்டு.

விதிமுறைகள், விளையாட்டு நுணுக்கங்கள், ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் வாய்ப்புகள்; எதிர்த்தாடுவோர் தந்திரத்தினைத் தகர்த்தும். தந்திறத்தால் வெல்லுகிற யுக்திகள் அறிவினை விருத்தி செய்வதுடன், ஆனந்த நிலையையும் தோற்றுவிக்கிறது. இந்த சக்தி விளையாட்டுக்கே உரிய தனிப் பட்ட சிறப்புச் சக்தியாகும்

5. ஓய்வும் உல்லாசமும் நிறைகின்றன.

எந்திரங்கள் மனித வாழ்வில் இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அடுத்தவரை நம்பி வாழத்தொடங்குகிற சூழ் நிலைகள் ஆக்ரமித்து விட்டன. சோம்பேறித்தனம் நாகரீகம் என்ற பெயரில் சிறையிட்டுக் கொண்டிருக்கிறது. ஆடை அலங்காரமும் ஆரவாரப் பேச்சும் தான் வாழ்க்கை என்று மனித இனம் நினைத்துக் கொண்டு, மத மதர்ப்போடு வாழ்ந்து கொண்டு வருகிறது.

அதன் விளைவு? பெயர் தெரியாத புதுப்புது நோய்கள் புற்றீசல் போல் கிளம்பி விட்டன. இனம் புரியாத மனக் கவலைகள்,குழப்பங்கள், சொல்லத் தெரியாத சங்கட உணர்வு கள் மனதுக்குள்ளே புகைந்து கொண்டிருக்கின்றன.