பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


மனதிலே தைரியத்தையும், உடலிலே சக்தியையும். திரட்டி, வலிமையுடன் எதிர்படும் தடைகளுடன் போராடும் வல்லமையை விளையாட்டுக்காரர் வளர்த்துக் கொள்கிறார்.

இது மட்டுமா? இன்னும் கேளுங்கள்,

விளையாட்டில் ஈடுபடும் ஒருவரை தனது சக்தியின் அளவினை அறிந்து, சாமர்த்தியமாக செலவழித்து செய்யற்கரிய சாதனைகள் செய்திடவும் வைக்கின்றன.

அதாவது, தனக்குள்ள பலஹீனம் என்ன? திறமையின் அளவு எது, தனது வலிமை எத்தகையது. செயலாற்றும் தன்மை, நெஞ்சுரம் எவ்வளவு, புத்திசாலித்தனம் எப்படி? உள்ளுணர்வுகளை விரைந்து வெளிப்படுத்தி இயங்கும் ஆற்றல் எப்படி? துன்பத்தையும் நெருக்கடிகளையும் சமாளிக்கின்ற சாமர்த்தியம் எப்படி என்பன போன்ற எண்ணற்ற அரிய, குணங்களை வளர்க்கின்ற அதிசய ஆற்றலை வளர்த்து விடுகிறது.

மனித குலத்தை விளையாட்டுக்கள் அற்புதமாக ஆட்சி செய்கின்றன. மாட்சியில் மகிமைப் படுத்துகின்றன.

வாழ்க்கையும் விளையாட்டும்

வாழ்க்கையும் விளையாட்டும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான். 'இயற்கை என்பது தான்' இப்படி இரண்டாகப் பிரிந்து, இன்பத்தின் திரண்ட வடிவமாகி விளங்குகின்றன.

வாழ்க்கையிலும் விளையாட்டுக்களிலும் இலட்சியங்கள் உண்டு. அதாவது இறுதியில் சேர்கின்ற இலக்குகள் உண்டு.