பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


புடைத்துக் கொண்டு, அது அந்த இறைச்சித் துண்டை கீழே போட மற்றொன்று எடுத்துக் கொள்ள, அங்கே ஜீவமரணப் போராட்டம் .

ஆசையோடு உண்ண வேண்டும் என்று துண்டினைப் பெறுகின்ற கழுகுக்கு அவதி. அப்படி தனக்குக் கிடைக்கவில்லையே என்று இழந்துபோன கழுகுகள், இராட்சச வெறி கொண்டு திரிகின்றன. சேர்ந்து திரிந்த சோதரப்பறவை தானே அது என்று எதுவும் எண்ணிப் பார்க்கவில்லை. எதிரியாகப் பாவிக்கத்தான் முயன்றன. முனைந்து தாக்கின. இறந்து போனாலும் பரவாயில்லை என்று கறித்துண்டை இழந்து நின்ற கழுகுகள் அத்தனையும் தாக்கின. தகர்த்தன.

இதிலிருந்து ஒன்றை நாம் உணர முடிகிறது.

இருப்பார்க்கும் இல்லார்க்கும் இடையே மண்ணுலகில் நடை பெறுகின்ற 'பொருள் உரிமைப் போராட்டம்' தான் வானவெளியிலும், வாயில்லா ஜீவராசிகளிடையே நடைபெறுகின்றன.

அறிவு இருக்கிறதோ இல்லையோ, ஆலையாய் எரியும் அனல் வயிற்றுக்கு அன்றாடம் எழுகின்ற அகோரப் பசிதான் அத்தனை இயக்களுக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது.

பறவைகள் பாய்ச்சலைப் போல் தான் பகுத்தறிவு படைத்த மனிதக் கூட்டத்திலும் பதுக்கலும் பிதுக்கலும், பாய்ச்சலும் பறித்தலுமாய் நிகழ்கின்றன.

இருப்பவரை நோக்கி இல்லாதவர்கள் கூட்டம் பாய்கின்ற ஏதோ ஒரு கொள்கை என்ற பெயரால், இலட்சியம் என்ற குரலால், எல்லாமே வேகவெறியுடன் நடைபெறுகின்றன.