பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


பேசித்தீர்த்து விட்டார்கள். அவமானத்தில் அவர்கள் தலை குனிந்து கிடந்தார்கள்.

இந்தக் காட்சி என் நினைவை விட்டு அகலவே இல்லை.

இந்தத் தேதியில் ஊருக்குப் புறப்படப் போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வண்டியில் தான் போகப்போகிறோம். இத்தனை மணிக்குத்தான் வண்டி புறப்படும் என்பதும் தெரியும். தெரிந்திருந்தும் இந்த இழி நிலைமை ஏன்?

இந்தத் திட்டு வாங்கிய குடும்பத்தினரைப் போலத்தான் நிறைய பேர்கள் நாட்டில் இருக்கின்றார்கள். நெஞ்சிலே மதமதர்ப்பும் தேகத்திலே சோம்பேறித்தனமும், தடித்தனமும் நிறைந்த கூட்டம் என்றுகூட நாம் தைரியமாகச் சொல்லலாம்.

காலதாமதம் எத்தனை எத்தனை கஷ்டங்களை உண்டு பண்ணி விடுகின்றது என்பது யாருக்குத் தெரியாமல் இருக்கிறது? இருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதுதான் புரியாத புதிர். ஆமாம். இதுதான் மனிதப்புதிர்.

ஒரு காரியத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு இடத்திற்குப் போகிறோம் என்றால், அதற்கு ஆயத்தமாக இருப்பவர்களால் தான் அமைதியாகச் செயல்பட முடியும். அற்புதமாகவும் செய்திட முடியும்.

அவசரப்பட்டுச் செல்பவர்கள் அடிக்கடி பதட்டப்படுகின்றார்கள். சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள். சமயோசிதப் புத்தியையும் சாமர்த்தியத்தையும் இருந்தும் பறிகொடுத்து விட்டுப் பரிதாபமாக நிற்கின்றார்கள். அதனால் தான் பதறாத காரியம் சிதறாது என்கிறார்கள்.