பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


வாய்ப்புக்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு. ஆசையிருக்கும் அளவுக்கு அறிவு போதாமல், திறமை இல்லாமல், திண்டாடித் திண்டாடித், தோல்விகளைச் சுமந்து நிற்கும் இரண்டாந்தர புத்திசாலி இனத்தவன் இவன்.

வராத வாய்ப்புக்களை தனக்கேற்ப உருவாக்கி, வந்திறங்கும் சோதனைகளை லாவகமாக ஏற்று, சாதனை புரிந்து வெற்றி அடைகின்றானே. அவனே அனைவருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறான். மற்றவர்களைவிட மேம்பட்டு நிற்கிறான். அவனே முதல்தர மனிதனாவான்.

சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக் கொள்கிறேன்? என்று சொல்லிய நெப்போலியன் தான், சாதாரண குடும்பத்தில் பிறத்தாலும் சக்கரவர்த்தியாக உயர்ந்து புகழ் பெற்றான்.

அந்த நெப்போலியனையும் போரில் வென்ற நெல்சன் எனும் ஆங்கிலேய வீரன், 'போர்க்களத்தில் சாகசங்கள் புரிய எனக்கு உதவிய ஆற்றல்களை எல்லாம். நான் ஆடுகளத்தில் விளையாடும்பொழுது கற்றவைகள் ஆகும் 'என்று கூறி மகிழ்ந்தான்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு குட்டிக் கதையை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

ஒரு எலி தன் வாரிசுக்கு மணமகன் தேடி அலைந்ததாம். வானத்து சூரியனைப் பார்த்து நீ தான் மணமகன் என்ற போது, என்னையே மறைக்கின்ற பலசாலி மேகம்தான் அங்கே போய் கேள் என்றதாம்.

மேகத்திடம் சென்றபோது, என்னையே அலைக்கழிக்கின்ற ஆற்றல் இந்தக் காற்றுக்குத்தான் இருக்கிறது. அவன்தான் சரியான ஆள் என்று சொல்லி அனுப்பி வைத்ததாம்.