பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


நம்புகின்ற நினைவுகளோடு, தெம்புடன் உழைக்கின்ற கைகளும் சேர்ந்து கொண்டு உழைப்பதால் தான், நம்பிக்கை என்ற சொல்லும் தோன்றியிருக்கலாம்.

இந்த நம்பிக்கை தான் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்குகிறது.

எதிலும் நம்பிக்கை முதலில் ஏற்பட்டால்தான், இதயமும் அதில் முழு மூச்சாகப் பதியும், புதிய வலிவும் திட்டமும் பிறக்கும். இறுதி வெற்றியை நோக்கி விளைவுகளும் முன்னோக்கி நடக்கும்.

நம் வாழ்வில், நாம் நீண்ட நாட்கள் வாழப்போகிறோம். என்ற நம்பிக்கை இருப்பதால் தான் நிலபுலன்கள் நிறைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். கோடிக் கணக்கில் பணம் சேர்க்க வேண்டும் என்று இரவு பகல் பாராது பாடுபடுகிறோம்.

எந்தெந்த வழிகள் தெரியுமோ, அவற்றில் எல்லாம் ஈடுபடுகிறோம். இதற்காகவே இறைவனை வேண்டுகிறோம். கோயிலுக்குப் போகிறோம். சோதிடம் கேட்கிறோம். குறுக்கு வழிகளையும் தேடுகிறோம்.

உள்ளத்தில் நம்பிக்கையை உறுதிப் படுத்திக் கொள்ளத் தானே இப்படிப்பட்ட முயற்சிகளை மக்கள் அனைவரும் மேற்கொள்கின்றார்கள்.

நம்பிக்கையுடன் வாழ்கிறவனோ, நியாயமான வழிகளிலேயே வாழ ஆசைப்படுகிறான். தவறி விழுந்தாலும் எழுந்து நிற்க முயற்சிக்கிறான்.

நம்பிக்கை இழந்தவர்களோ, ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். புழுங்கிப் புழுங்கி