பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


பேரின்பம் அடைகிறான். நம்பிக்கையற்றவனோ, தனக் குள்ளே குழம்புகிறான். தடுமாறுகிறான். தளர்ச்சி பெறுகிறான். பெருமூச்சு விடுகிறான்.

நீரில் வீழ்ந்தால் தானே நீச்சலைக் கற்றுக் கொள்ளமுடியும்? தரையில் படுத்துக் கொண்டு நீந்த முயற்சித்தால் எப்படி?

நீரில் விழுந்து முயற்ச்சிக்கிறவன் நம்பிக்கையாளன்.

தரையில் கிடப்பவன் தன்னையே நம்பாதவன்.

நீரில் வீழ்ந்தால் நீந்த உதவும் நீச்சல் குளம் போன்றது விளையாட்டுக்களும் ஆடுகளமும்.

தரையில் படுத்திருப்பவனோ, வாழ்வில் படுத்தே போகிறான்.

அவநம்பிக்கையுள்ளவனைக் கெடுக்க, வேறு எதிரிகள் யாருமே வேண்டாம். அவனே அவனுக்கு எதிரியாவான்.

நம்பிக்கை எவனையும் ஏமாற்றாது. இந்த எண்ணத்தை விளைவிப்பது தான் விளையாட்டுக்களாகும்.

நம்பிக்கை பயத்தின் எதிரி.

நம்பிக்கையும் பயமும் பிரிக்க முடியாத சக்திகள் தான். ஆனால், ஒருவன் பய உணர்விலிருந்து விடுபட வேண்டுமானால், நம்பிக்கை நிறைந்தவனாக இருத்தல் வேண்டும்.

நிறைந்த நம்பிக்கை உள்ளவனே, வாழ்வில் மற்றவர்கள் மதிக்கத்தக்க அளவில் உயர்ந்திட முடியும்.

ஏன் அப்படி நம்புகிறோம்? அ. வி -4