பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள் எல்லாம், முயற்ச்சிக்கும் நேரங்களில் வீழ்ந்து அடி பட்டவர்கள் தாம்.

வீழ்ந்ததை எண்ணிக் கிடப்பவர்கள் கோழைகள்.

வாழுகின்ற ஒவ்வொரு நிலையிலும். எழுந்து முன்னேற எத்தனிக்கும் இயல்புள்ளவர்களே, புகழ் பெறுகின்றார்கள்.

இந்தப் புகழ்நிலைக்கு அழைத்துப் போவது தான் விளையாட்டுக்கள் ஆகும்.

விளையாட்டு மனிதர்களிடையே நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் மேலும் உயர்த்துகிறது. பய உணர்வைப் போக்குகிறது. பங்கு பெறும் ஆசையைத் துண்டுகிறது.

எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படும் எழுச்சியை ஏற்படுத்துகிறது.

என்னால் முடியும் என்று முயல்வது--

நான் முயற்சித்துப் பார்க்கிறேனே என்று செயல்படுவது.

எனக்கு வெற்றி கிடைக்கும் என்று உழைப்பது--

எப்படியும் வென்றே தீருவேன் என்று சபதம் எடுப்பது--

இன்றில்லாவிட்டாலும், நாளைக்காவது என் முயற்சியால் வெல்வேன் என்று கங்கணம் கட்டுவது.

கடமையுணர்வுடன் ஈடுபடுவது--

பிறர் பரிகாசத்தினை புறம் தள்ளுவது.

எல்லாமே நம்பிக்கை தரும் நல்ல பலம்தான்.