பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8.போராட்டம் போதும்


உண்ண உணவு, உடுக்க உடை ,இருக்க உறையுள். இந்த மூன்றும் தான் ஒவ்வொரு மனிதருக்கும் எதிரே தின்று, புதிர் கிளப்பியும் சதிராடியும் பிரச்சினைகளை விளைவித்துப் போராடச் செய்வனவாகும்.

இந்த மூன்றும் எதிர்பார்ப்பது போல ஒருவருக்குக் கிடைத்து விட்டால், மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான், ஆனால் வாழ்க்கை என்பதற்குப் பொருள் அப்படி இல்லையே!

ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு வேறு ஒன்று நடக்கும். நாம் விரும்பாதது எதுவோ, நடக்க வேண்டாம் என்று எதை அதிகம் நினைக்கிறோமோ, அதுவே முதலில் நடக்கும். இப்படி நடந்தால் எப்படி வாழ்வு இனிக்கும்? சிறக்கும்?

பணம் என்று ஒன்று நிறைய வந்து விட்டால், சிந்து பாடும் தொந்தரவுகள், சஞ்சலங்கள் எல்லாம், சொல்லிக் கொள்ளாமல் வாலை சுருட்டிக் கொண்டு ஓடிவிடும் என்று சொல்லி மகிழ்பவர்கள், நிலைமையும் . அவர்கள் நினைத்தது போல் நடக்கவில்லையே ஏன்? பணமே ஒரு பிரச்சினை தான.

பணத்தை சம்பாதிக்க ஒரு போராட்டம். வந்த பணம் போய்விடக் கூடாதே என்று மறு போராட்டம். பணம் வந்த