பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

அற நூல்கள் கூறிய முறைகளில், ‘விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும்’ தான் ஒழுக்கம் என்று நமதுமுன்னோர்கள் கூறி, அத்தகைய அறவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

'அறவழி ஒழுக்கமும்,' ஒழுக்கத்தின் வழி பொருளிட்டலும், பொருள் வழி ஒழுங்குபட்ட இன்பத்தை அனுபவித்தலுமே சிறந்த வாழ்க்கை' என வாழ்ந்து உலகுக்கே வழி காட்டினர்.

அதனால் தான் இல்லறம், துறவறம் என்று இரு அறவழிகளைக் காட்டி, தேகத்திற்குத் திறமையையும், ஆன்மாவிற்கு அமைதியையும் தேடிக் கொண்டனர்.

இந்த இரண்டு அறங்களையோ, வட நூலார் நான்காகக் கூறினார்கள். அமைதிக்காக, ஆன்மாவின் சுகத்திற்காக, அரும்பெரும் வீட்டுப் பேறுக்காக, அவர்கள் வகுத்த கொள்கை இப்படியாக இருந்தது.

1. பிரம்மசாரியம், 2. கிருகஸ்தம் 3. வானப்பிரஸ்தம் 4. சந்நியாசம்.

திருமணமாகாமல் துறவறம் மேற்கொள்வது பிரம்மசாரியம். இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அணுகுவது கிருகஸ்தம். காட்டிற்கு துணைவியுடன் சென்று, அங்கே துறவற வாழ்க்கையை மேற்கொள்ளுவது வானப்