பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


ஆனால் மனிதக் கூட்டத்தின் மகிமையோ தனியாகவே தெரிகிறது. கூட்டமாக மனிதர்கள் கூடும் போது தான் ஆபத்தானவர்களாக' ஆகி விடுகின்றார்கள். கட்டுகடங்காமல். சில சமயங்களில் காலித்தனத்தைக் கட்டவிழ்த்துத் திரிகின்ற 'காட்டுமிராண்டிகளாகவும் மாறிப் போகின்றார்கள்.

ஆனால். மனிதன் தனியாக இருக்கும்பொழுது ஆபத்தற்ற ஜீவியாகத்தான் விளங்குகிறான். தனிமையில் சிந்தனை அதிகமாக இருக்குமே தவிர, கொடுமைத்தனம் அதிகம் இருக்காது என்பது அனுபவசாலிகளின் நம்பிக்கை.

தனித்திருக்கும் பண்பினை வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள், சிந்தனைவாதிகளாகவும், சிலர் ;சீரிய திறம்பட செயலாற்றும் வல்லுநர்களாகவும் வாழ்வதை நாம் நேரில் கண்டிருக்கிறோம். ஆகவே முன்னேறும் வாய்ப்பு மனிதனுக்கு வேண்டுமென்றால், தனித்திருத்தல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

சதா காலமும் தூங்கிக்கொண்டிருப்பவன், அல்லது தூக்க உணர்வோடு சோம்பல் கொண்டிருப்பவன், சகல சம்பத்துக்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், விரைவில் அனைத்தையும் இழந்து, தரித்திரனாகி விடுவான்.

விழிப்புணர்ச்சியுடன் விளங்குபவர்களே,வெற்றிக்கு உரியவர்களாகின்றார்கள். கருமமே கண்ணாக இருப்பவர்கள் கண்ணுறக்கம் கூட கொள்ள மாட்டார்கள் என்பது பழந்தமிழ் பாட்டன்றோ!

இறைவனைத் தேடி, எல்லாவற்றையும் துறந்து, உடலை ஒரிடத்தில் அமர்த்தி, உள்ளத்து நினைவுகளை ஒரு வழிபடுத்தித் தவம் செய்யும் துறவிகளுக்குத்தேவை பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல் என்பனவாகும்.