பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


பண்பு: `பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்பது புறநானூற்று வரியாகும். சூழ்நிலையறிந்து, சுற்றுப் புறம் தெளிந்து' சூழ்ந்திருப்போர் தன்மைகளை உணர்ந்து, பக்குவமாக ஒழுகுதல் தான் பண்பாகும்.

ஒருவர்க்கு அணி என்பது பணிவு தான் என்கிறார் வள்ளுவரும்.

ஏன் ஒருவருக்குப் பணிவு வேண்டும்? என்றால் பணிவு என்பது வெற்றியை வழங்கும் தாயாக விளங்குவதால் தான். அதோடு மட்டுமல்ல, ஒருவரை பத்திரமாக வழி நடத்தி, வாழவைக்கும் பாதுகாப்புச் செவிலியாகவும் விளங்குகிறது .

பணிவு என்பது உள்ளத்தோடு இணைந்து, இயைந்து பின் செயலாகப் பரிணமிப்பது நல்லவர்களும், அறிவாளிகளும். இதனை தாங்களாகவே செய்கிறார்கள் அது. தான் பண்புடமையாகும்.

நீதி தவறி நடப்பவர்கள், நெறிமாறிச் செல்பவர்கள் பணிகிறார்கள். எப்பொழுது? பயத்தால். தண்டனைக்குப் பயந்து. அதிகாரத்திற்குப் பயந்து.

நல்லவர்களோ அன்புக்கு மட்டுமே பணிகிறார்கள். ஆணவத்திற்கும் அதிகாரத்திற்கும் அவர்கள் பயப்படுவதேயில்லை.

பிறரிடம் பணிவாக நடக்க வேண்டும் என்பது தருமத்தின் தலையாய கொள்கை, ஆண்டவன் அளித்த சட்டங்களில் அதுவே முதலாவதாகவும் இருக்கிறது.

ஏன் பணிவினை இவ்வளவு வற்புறுத்துகிறார்கள் என்றால், பணிவுஎன்னும் குணமானது இயற்கையானது. உணர்வுகளுடன் இரண்டறக் கலந்ததாகும். ஒருவரை பத்திரமான