பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


புத்தர், காந்தி இந்த கருணையைத்தானே கையாண்டு உலக மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.

கனிவாகப் பேசுவதைக் கனி என்றும், கடுமையான சொல்லைக் காயாகவும் வள்ளுவர் இதனால்தான் உவமித்துக் கூறுகின்றார்.

"கனிவாகப் பேசும் பொழுது, நாக்குக்குக் காயம் எதுவும் பட்டுவிடாது" என்று கூறுகிறது பிரெஞ்சுப் பழமொழி ஒன்று. ஆகவே, கனிவு என்பது அன்றாட வாழ்வுக்கு அவசியமானது என்பதை நாம் அனுசரித்துத் தானே ஆக வேண்டியிருக்கிறது.

துணிவு: ஆண்மையின் முதிர்ச்சி தான் துணிவு என்றோம். எடுத்ததெற்கெல்லாம் துள்ளிக் குதித்து அடிதடியில் இறங்குவது, சலசலப்புக்கு ஆட்படுத்துவது என்பதெல்லாம் ஆண்மையுமல்ல. துணிவும் அல்ல.

துணிவு என்பதற்கு அஞ்சாமை என்பார்கள். எதற்கும் அஞ்சாததற்குத்தான் துணிவு என்று அழைக்கிறார்கள். ஆனால், அஞ்சுவதற்கு அஞ்சுவது அறிவுடைமை என்ப தனையும் தாம் உணர்ந்து கொள்ள வேண்டும்,

எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து நடப்பது. தவறுக்காகப் போராடுவது, சரியானதற்காகத் துணை செல்வது இது தான் துணிவாகும்.

உடலால் ஆத்திரப்பட்டு செயல்படுதல் என்பது துணி வல்ல. அது மிருக நடைமுறையாகும். தாக்குதல் மட்டுமே துணிவல்ல. மனதால் உரத்துடன், பண்புடன் செயல்படுவது தான் உண்மையான துணிவாகும்.

இந்தத் துணிவு, பண்பான மனசாட்சியிலிருந்து தான்

. தொடர்கிறது. திறம் பெறுகிறது.

அ.வி.-5