பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. ராஜ நீதி 

இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து உருண்டன. கட்டிப்பிடித்துப் புரண்டன.

அந்த நாய்க்குட்டிகளை ஆசையோடு வளர்த்து வரும் சிறுவன். தன் தந்தையிடம் ஓடி, நாய்க்குட்டிகள் சண்டை போட்டுக் கொள்வதைப் பற்றிப் புகார் செய்தான். இனிமேல் சண்டை போடாதபடி. ஏதாவது ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டான்.

தந்தையோ இதைக்கேட்டு சிரித்துக் கொண்டார் புகார் செய்த பையனுக்குக் கோபம். இப்படித் தன்னை ஏளனப் படுத்துகிறாரே சிரித்து என்று எரிச்சல்... ஏமாற்றம்...

மகனே! அந்த நாய்க்குட்டிகள் சண்டைபோடவில்லை. தங்கள் வாழ்க்கைக்காக பயிற்சிகள் செய்து கொள்கின்றன என்றார்! எப்படி என்று இமைகளை உயர்த்தினான் பையன்.

இரண்டு குட்டிகளும் தங்கள் பசியென்னும் தேவையை தீர்த்துக்கொள்ள, போராட வேண்டியதாக இருக்கின்றன. பெரிய நாயாக மாறிவிட்டால், எதிர்த்துவரும் இன்னொரு நாயுடன் சண்டைபோட்டு வென்றால் தானே தின்ன ஏதாவது அதற்குக் கிடைக்கும்!