பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



81


எதிர்த்து வருகின்ற எதிர்க்குழுவினரை சமாளித்துப் போராடி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விளையாட்டின் இலட்சியமாகும்.

உணர்ச்சிவசமாகிப் போராடும் பொழுது, தெரியாமல், தவறு நேர்வது இயற்கை. இதை Foul என்ன ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

வெற்றி பெற வேண்டும் என்று வெறிக்கு வசமாகீக் பொனவர்கள், விதிமுறைகளை ஏமாற்றி தெரிந்தே தவறி ழைப்பார்கள். இதற்குக் குற்றம் என்று பெயர். இதை Intentional Foul என்று விதிகள் கூறும்.

தவறிழைக்க அனுமதியுண்டு, இது மனித நீதி. இதற் காகவே விளையாட்டுக்கள் ஆட்டக்காரர்களை தவறிழைக்க அனுமதிக்கின்றன. அதாவது தவறு செய்யும் பொழுது தான் சரியானது எது, மாற்றிக்கொள்வது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவறு செய்கின்றவன் தான், சரியான பாதையைஅறிந்து, நேர்வழி செல்ல முடியும். இதைத்தான் கற்பிக்கும் முறையில்.Trial and Error method என்பார்கள்.

முயலாமல் தவறு செய்து, முயன்று திருத்திக் கொள்வது தான் மனிதப் பண்பு.

கூடைப் பந்தாட்டத்தில் பாருங்கள். ஒருவர் 4 முறைத் தவறிழைக்கலாம். 5 முறை தவறு செய்தால் அவர் தண்டிக்கப்படுகிறார். ஆமாம் ஆடுவதற்கே வாய்ப்பில்லாமல் வெளியேற்றப்படுகிறார்.

ஓட்டப் பந்தயத்தில் பாருங்கள்.