பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


உடலா லும் உள் ளத்தாலும் உணர்வாலும் உச்சக் கட்டத்திலே உலா வருகின்றார் என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பாகும்,

அத்தகைய உச்சக்கட்ட உணர்வுகள் உண்டாக்கும் உந்துதல்களுக் கேற்ப உடல் உறுப்புக்கள் ஒத்துழைத்து உழைப்பதுதான் உண்மையான ரகசியமாகும்.

சாதாரண மனித tசளால் சிறிதளவு கூட சமாளிக்க முடியாத அந்த சக்தி, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எப்படி கிடைக்கிறது? அது என்ன தந்திரமா? மந்திரமா?

இத்தகைய எழுச்சி மிக்க சக்தி எப்படி கிடைக்கிறது என்றால், அதை ஆராய்ந்த அறிஞர்கள், ஒரு புதியபெயரையே சூட்டியிருக்கின்றார்கள். அதற்குப் பெயர் அறிவார்ந்த விதி. (The Law of Rationalitv) என்பகாகும்.

நன்கு பயிற்சிப் பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்க ஏற்படுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்றமுடன் வெற்றி காண, உடலில் உள்ள சில தற்காப்புவால்வுகள் திறத்து கொண்டு, திறமையுடன் செயல்படத் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட மறைமுகமான செயல் திறன்களை மிகுதிப் படுத்திக் காட்டுவது தான் அறிவசர்ந்த விதியின் அப்பட்ட மான முயற்சியாகும்.

இன்னும் விரிவாக இந்த விதியினை அறிந்து கொள் வோம்.

அதிக உச்சக்கட்ட சூழ்நிலைகளில் உண்டாகும் உணர்வு நிலை (Super Tension)க்கு ஈடு கொடுப்பது போல, நரம்பு களும், தசைகளும் அதிவேகமாக ஈடுபட்டு, அதிஅற்புதமான ஆற்றலை உண்டு பண்ணி விடுகின்றன.

இதில் என்ன விஷேம் என்றால், ஒவ்வொரு இயக்கமும் அடிப்புடைத் தேவை ச்கு ஏற்பவே நடைபெறுவது தான்.