பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


ஒரு மனிதன் அல்லது விளையாட்டு வீரன், ஒரு காரியக் தில் ஈடுபடும் பொழுது, அவனது உடல் பலத்தை முழுவதும் பய்ன்படுத்தியே முனைகிறான். ஆனால், நன்கு பயிற்சி செய்து, பழக்கப்பட்ட மனிதன் அல்லது விளையாட்டு வீரன் மற்றவர் செய்வதைவிட, இன்னும் சிறப்பாக செயல்படுகிறான். அதற்குக் காரணம், அவன் தனக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை தனது பயிற்சியின் மூலமாக வெளிக் கொண்டு வந்து விடுவதுதான்.

இது எப்படி முடியும் என்ற வினா எழும்புவது எனக்குப் புரிகிறது.

ஒரு வேலெறியும். நிகழ்ச்சியை (Javelin) இங்கு உதராணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

வேலெறிவது என்பது மனிதர்களுக்குரிய சாதாரண எறியும் உணர்வின் வெளிப்பாடுதான்.

இந்த வேலெறியும் தூரம், மனிதர்க்கு மனிதர் வித்தியாசப் படும். காரணம், அந்தந்த மனிதர்களின் உடல் பலம் தான்.

இந்த எறியும் நிகழ்ச்சியில் கொஞ்சம் பழக்கப்பட்ட வீரன், உடல்பலம் உள்ளவர்களைவிட, இன்னும் அதிகமாக எறிய முடியும். எறியும் ஒவ்வொருவருக்கும் எறியும் திறன் நுணுக்கம் என்று பல முறைகள் உண்டு,

85 மீட்டர் துாரம் எறிவது என்றால் அது உலக சாதனை தான். இப்பொழுது 100 மீட்டர் தூரம் வரை வேலெறிகிறாசி கள் என்றால், அது எப்படி முடிகிறது?

சாதாரண வீரனை விட சாதனை புரியும் வீரன் எப்படி இதை சாதிக்கிறான்?

சாதாரண மனிதன் ஒருவன் வேலைப்பிடித்து தூக்கி எறிகிறான் என்றால், அவனது கைபலம், கால்பலம்