பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மா அடையும் பயன்கள் 87 தையும் வெளியிடுகின்றனர் இப்பாசுரத்தில், நாயகரே! நின்னருளே புரித்திருக்கும் எங்கள் பக்கலில் எடுத்துக் கழிக்கலாம்படியும் சில உபாயங்கள் உளவென்றிருந் தாயோ? "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் (23). என்றும், இன்று யாம் வந்தோம் இரங்கு' (24) என்றும் தாங்கள் வேண்டிய அருளுக்குப் பிரதிபந்தகமாகத் தங்கள் திறத்தில் சாதனாம்சம் ஒன்றும் இல்லை என்று ‘சர்வஜ்யனுக்கு அறிவிக்கின்றார்கள். 'சிற்றஞ்சிறுகாலை (29) என்ற இருபத்தொன்பதாம் பாசுரத்தில் தங்கள் குறிக்கோள் கைங்கரியம் என்று பிரபந்தத்தின் தாற்பரியத்தைச் சொல்லி முடிக்கிறார்கள். முன்னரெல்லாம் 'பறை, பறை' என்று சொல்வி வந்த ஆயச்சிறுமிகள் அப்பறையின் பொருளைத் தீர்மானித்து விண்ணப்பம் செய்யும் பாசுரம் இது. "நாட்டார் இசைவு பெறுவதற்காக நோன்பு என்ற ஒன்றைக் காரணமாகக் கொண்டு இங்கு வந்தோமேயன்றி எங்களது குறிக்கோள் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் புரிவதுதான்; இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னைவிட்டு நாங்கள் பிரிந் திருக்க முடியாது; வேறு ஒரு வகையான விருப்பம் எமக்குப் பிறவாவண்ணம் நீயே அருள் புரிய வேண்டும்” என்கின்றனர். - எம்பெருமானுடைய பிறவிதோறும் ஒக்கப் பிறக்கும் பிராட்டியைப் போல தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட் செய்ய நினைக்கின்றனர், ஆழ்வார்கள் எல்லோரும் 'இனிப் பிறவி யான வேண்டேன்' ( ) என்றும், 'ஆதலால் பிறவி வேண்டேன்' (திருமாலை-3) என்றும்’ கூறி பகவானிடம் வேண்டியது பிறப்பறுக்கவே வேண்டும் என்று. ஆண்டாள் அங்ங்னம் பேசாமல் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்றமையாலே அவனுடைய 4. உபாயத்துவம்-சித்தோபாயம்.