பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அர்த்த பஞ்சகம் அவதாரங்கள்தோறும் கூடவே வந்து பிறக்கின்ற நாச்சிமார்களிலே இவள் ஒருத்தி' என்னும் இடம் தெரி விக்கப்பட்டதாகின்றது. 'வங்கக்கடல் கடைந்த' (30) என்ற முப்பதாம் பாசுரத்தில் இப்பிரபந்தம் கற்றார் பிராட்டியாலும் எம் பெருமானாலும் எல்லாக்காலங்களிலும் அங்கீகரிக்கப் படுவார்கள் என்கின்றனர். 'சங்கத் தமிழ் மாலை'-பஞ்ச லட்சம் குடிப் பெண்கள் திரள் திரளாக அநுபவித்து போல, பக்த பாகவதர்கள் திரள் திரளாக அநுபவிக்க வேண்டும் என்பது தாற்பரியம். திருவாய்ப்பகடியில் பெண்களுக்குக் கிருட்டிணன் சமகாலத்தவனாகையால் கிருட்டிணனை அவர்கள் நேரில் காணமுடிந்தது, அந்த நேர் காட்சியை ஆண்டாள் நாச்சியார் பாவனை செய்து பெற்றாள். அவளிலும் பிற்பட்ட நம் போலியர் அப்பேறு பெற வேண்டில் இப் பிரபந்தத்தை ஒதிலும் போதும். 'கன்றிழந்த தலை நாகு தோற்கன்றை மடுக்க அதுக்கு இரங்குமாப் போலே ஆய்ச்சியர் சொன்ன இப்பாசுரங்கொண்டு பலிக்கும்' என்பர் பட்டர். அதிகாலையில் எழுந்து 'முப்பது பாட்டையும் தப்பாமல்-ஒரு பாட்டும் நழுவாமல்- அநுசந்திக வேண்டும். அதனைச் செய்ய முடியா விட்டால் 'சிற்றஞ்சிறுகாலே' (29) என்ற பாசுரத்தை அநுசந்தித்தால் போதும். அதையும் செய்ய முடியாமற் போனால் நாம் இருந்த இருப்பை நினைப்பது' என்பர் பட்டர். "நாம் (பட்டர்') இப்பிரபந்தத்தை அநுசந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை' என்றபடி,