பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அர்த்த பஞ்சகம் மணம் செய்து கொள்ளப்பெற்ற பெண்களும் மக்க ஆளும் உறவினர்களும் தாயாதிகளும் நட்பினர்களும் ஆகிய அனைவரும், கையில் உள்ள பொருள் உண்டாகக் கண்டபோது அன்புள்ளவர்களாகக் காணப்படுவார்கள்; அஃது இல்லாத போது அன்புள்ளவர்களாக இருப்பது இல்லை; ஆதலால் பத்துத் திசைகளிலுமுள்ள எல்லாப் பொருள்களையும் பிரளய காலத்தில் உண்டு காப்பாற்றிய உபகாரகனாகிய எம்பெருமானுக்கு அ டி யா ரா கி உய்யயுங்கள்; இன்றேல், பொருந்திய துணை வேறும் ஒன்றும் இல்லை. . (1) தாயாதிகளும் மற்றையோரும் துணையாயும் சார் வாயும் இருப்பவர்கள் போலக் காட்டி, சேர்ந்திருக்கின்ற செல்வம் இருக்குமேயானால் அட்டைகளைப் போன்று சரம் அறச் சுவைத்துவிடுவார்கள்; ஒர் அம்பினால் மராமங்கள் ஏழனையும் துளைவி செய்த காளமேகம் போன்ற எம்பெருமானைத் தஞ்சமாகப் பற்றி உய்விக்கப் போமின்; அவ்வாறு இன்றி வேறு சிலரைப் பற்றினால் ஒரு பயனும் இல்லை. (2) கையிலே பொருள் இருப்பதைக் கண்டால் வணக்கம் என்று கூறி, யாதாயினும் ஒன்றினைப் பெற்றுக் கொண்டு அகன்று போவர்; அறிவின்மையையும் துன்பத்தையும் 'உண்டாக்குகின்ற வறுமையைக் கண்டால் அந்தோ!' என்று இரங்குவாரும் இல்லை; ஆதலால் கண்டவர் அனைவரும் கலங்கும்படியான தொழில்களைச் செய்கின்ற அசுரர்கள் அழியும்படியாக வடமதுரையிலே அவதரித்த கண்ணபிரானுக்கு’, அருளைப்பெறுவதற்குரிய அடியவர் 4. வடமதுரைப் பிறந்த' (பாசுரம் 3,4,5,6,7,8, 9,10) என்று வ ரு வ தா ல் இப்பதிகத்தை வடமதுரையை மங்களாசாசனம் செய்ததாகக் கொள்ளலாம்.