பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 139 பகவானோடு சேர்தல்ையும், 蜴 z & 3 : * . * டியில் அழகிய மண்வாளப் பெருமாள் இக்கருத்ை தத்தெளிவாகவிளக்கினர். 'அம்பரமே தண்ணிரே (17) என்ற பதினேழாம் பாசு ரத்தில் நந்தகோபர், யசோதைப் பிராட்டி, கண்ண பிரான், நம்பி மூத்த பிரான் (பலராமன்) ஆக நான்கு பேர் எழுப்பப்பெறுகின்றனர். இங்கு 'உம்பியும் நீயும் உறங்கேல்' என்பது பகவத் சேஷத்துவமும் பாகவத சேஷத்துவமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திரா என்கிற தத்துவத்தை நினைவூட்டுவதாக அமைகின்றது. 'உந்துமத களிற்றன் (18) என்ற பதினெட்டாம் பாசுரத்தில் கண்ணபிரானின் திவ்விய மகிஷியான நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகின்றனர். கிருட்டினா வதாரத்தில் நப்பின்னைப் பிராட்டியே பிரதான மகவி யாகக் குலாவப்படுகின்றாள். ஆழ்வார் பாசுரங்களில் உருக்குமினிப் பிராட்டியைப் பற்றி மூன்கு நான்கு இடங் களில் மாத்திரமே உள்ளது; நப்பின்னை பற்றிய குறிப்பு பல நூறிடங்களில் வருகின்றது. நப்பின்னை கும்பர் என்பாரின் மகள் கும்பர் திருமகளாரே என்றழைக் காமல் 'நந்தகோபாலன் மருமகளே' என்றழைத்தமைக்குக் காரணம் என்ன? பெண்டிர்க்குப் பிறந்தகத்துச் சம்பந்தத்தைக் காட்டிலும் புக்ககத்துச் சம்பந்தமே பெருமையுடைய தாயிருக்கும் என்பதால். 'குத்துவிளக்கெரிய (19) என்ற பத்தொன்பதாம் பாசுரத்தில் நப்பின்னை, கண்ணன் என்ற திவ்விய தம்பதி