பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்த்த பஞ்சகம்

5


ருசி9 இவற்றிற்கு வசப்பட்டு பிறப்பு, இறப்பு முதலிய துன்பங்களில் உழழ்கின்றவர்கள்.

அர்த்த பஞ்சகம் : சம்சாரியான சேதநன் தத்துவ ஞானம்பிறந்து உய்யும்போது தோன்றுவது அர்த்தபஞ்சக ஞானம். இஃது (1) ஈசுவரனது இயல்பு, (2) ஆன்மாவின் இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைதற்குரிய வழிகள் (உபாயம்) (5) அப்பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் ஆகும். இவற்றில் ஒவ்வொரு பொருளும் ஐந்து வகைப்பட்டிருக்கும்.

1. ஈசுவரனின் இயல்பு என்பது ரத்துவம், வியூகம், விபவம் (அவதாரங்கள்), அந்தர்யாமித்துவம், அர்ச்சா வதாரம் என்று ஐக்து.

2. ஆன்மாவின் இயல்பு என்பது நித்தியர், முக்தர், பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), கேவலர், முமுட்சுகள் என்று ஐந்து.

3. ஆன்மா அடையும் பயன் என்பது புருஷார்த்தம்; புருஷனால் (ஆன்மாவால்) அடையப்படுவது. அதுதான் அறம்(தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆன்ம நுபவம், பகவதநுபவம் என்று ஐந்து.

_______________________________________

7. கருமம் : மேல் குறித்த அபிமானத்தினால் விளையும் புண்ணிய பாவங்கள்.

8.வாசனை : இஃது அவித்தியை வாசனை, கரும வாசனை என இருவகைப்படும் அவித்தியை வாசனை - அரவம் முதலியவற்றைக் காணுங்கால் அஞ்சுதல், முதலியவற்றுக்குக் காரணமான, அஞ்ஞான வாசனை;கருமவாசனை துரும்பு முதலியவற்றைக் கிள்ளுவதற்குக் காரணமாய் உள்ள கருமவாசனை.

9. ருசி : பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்களையோ அறிந்தே செய்வதற்குக் காரணமாய் உள்ள சுவை.