பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறம் உரைத்த அன்னையார்

35


அதியமான் பெற்ற அமுதக்கனி

ஒரு சமயம் அதியமான் பொதிய மலைப் பக்கம் போயிருந்தான். அங்கே அவனுக்கு அரியதொரு நெல்லிக்கனி கிடைத்தது. அது பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை தோன்றுவது. அக்கனியைத் தரும் நெல்லி மரத்தை நெருங்குவதே அருமை. எவரும் ஏற முடியாத மலையுச்சியில் அந்த மரம் நின்றது. பெரிய பாறைகளுக்கு இடையில் உள்ள பிளவு ஒன்றில் அது நின்றது. அந்த மரத்தைப் பருத்த வண்டுகள் சுற்றிச் சுற்றி மொய்த்துக் கொண்டு இருந்தன. அவ்வண்டுகளை அதியமான் மருந்து தூவி விலக்கினான். தக்க வலியவரைக் கொண்டு கனியைப் பறித்துவரச் செய்தான்.

ஒளவையாருக்குக் கனியை அளித்தல்

அக்கனி, உண்டவர்க்கு உரமான உடலைத் தர வல்லது; வளமான நீண்ட கால வாழ்வையும் தர வல்லது. இவ்வளவு அருமை வாய்ந்த கனியை உண்ணும் எண்ணத்துடன் அதியமான் கையில் எடுத்தான். அச்சமயத்தில் தமிழ் மூதாட்டியாராகிய ஔவையார், தன்னை நோக்கி வருவதைக் கண்டான். உடனே, அவன் உள்ளம் மாறி