பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அறநூல் தந்த அறிவாளர்


நாற்சீர் அறநூல்

இதற்கு அடுத்த படியில் விளங்குவது 'கொன்றை வேந்தன்' என்னும் அறநூல் ஆகும். இஃது இளந்தைப் பருவத்துப் பிள்ளைகள் கற்பதற்கு ஏற்ற எளிமையுடையது ஆகும். நான்கு சீர்களைக் கொண்ட நற்றமிழ்த் தொடராக அமைந்த இந்நூலில் தொண்ணூற்றொரு தொடர்கள் அமைந்துள்ன. ஆத்திசூடியில் குறித்த அறங்களே இந்நூலில் காரணங்களுடன் விளக்கப்படும். ஆத்திசூடியில் 'ஒளவியம் பேசேல்' என்ற ஓளவையார், கொன்றை வேந்தனில் 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று அதன் விளைவையும் விளக்கினார்.

முதுரை முப்பது

இதனையடுத்துக் காளைப் பருவத்து இளைஞர்கள் கற்றற்கு உரிய சிறிய நூலே 'மூதுரை' என்பது ஆகும். இந்நூலை 'வாக்குண்டாம்' என்றும் வழங்குவர், மூதுரை நூலின் முதற்பாடல் 'வாக்குண்டாம்' என்று தொடங்கும். ஆதலின் இந்நூல் 'வாக்குண்டாம்' என்றும் பெயர் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக முப்பது பாடல்கள் உள்ளன. தமிழில் உயிரும்