பக்கம்:அறவோர் மு. வ.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

135


அன்று தொடங்கிய தொடர்பு அவர் வாழ்நாளின் இறுதிவரை இடையறவு படாமல் நீடித்ததனை நான் என் வாழ்வின் மிகப் பெரிய பேறு என்று கருதுகின்றேன்.

ஆனால், அவர்கள் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது 7.10.1974 திங்கள் அன்று மாலை 7 மணியளவில் மருத்துவரைப் பார்த்து 'எழுபது ஆண்டுகள்' வரை உயிருடன் இருப்பேன் என்று பாலசுப்பிரமணியனிடம் உறுதிமொழி (Assurance) தந்துள்ளேன். அதன்படி மருந்தில்லாமல் என் உடலை நானே இயற்கை மருத்துவ முறைப்படிக் காத்து ஆறேழு ஆண்டுகள் வாழ்வேன்' என்று அவர்கள் ஆணித்தரமாகக் கூறிய சொற்கள் இன்று என் நினைவை விட்டு நீங்காமல், இன்றும் என் காதுகளில் ஒலிப்பனபோல் இருப்பதனை எண்ணி எண்ணிக் கலங்குகின்றேன்.



1921ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 25ஆம் நாள் திருப்பத்துாரில் பிறந்தவர்கள். வாலாசாவை அடுத்த வேலம் இவர்தம் சொந்த ஊர். பள்ளியிறுதித் தேர்வை 1928ஆம் ஆண்டில் எழுதி நல்ல வெற்றி பெற்றார்கள். கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துத் தலைமையாசிரியர் திருவேங்கடத்தையங்கார் பாராட்டினைப் பெறுவது வழக்கம். பள்ளி நாட்களில் அவரே இவர் தரமும் தகுதியும் ஆற்றலும் அறிந்து பாராட்டி ஊக்குவித்து வந்தார்.

இவருடைய வீட்டில் இவரை, இவரை வளர்த்த பாட்டியார் 'திருவேங்கடம்’ என்ற பெயராலேயே அழைப்பார். பள்ளிப் பெயர் வரதராசன் என்றிருக்க, விட்டில் "திருவேங்கடம்” என்ற பெயராலே வழங்கப் பெற்றார். அந்த அன்புப் பாட்டியின் நினைவில் மலர்ந்ததே 'விடுதலையா' என்ற சிறுகதை.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/138&oldid=1239002" இலிருந்து மீள்விக்கப்பட்டது