182
அறவோர் மு. வ.
மேலும் மு. வ. அவர்கள் சமுதாயத்தை வெறும் அறவுரைகளால் மட்டும் திருத்திவிட முடியாது, என்று உறுதியாக நம்புகின்றார். விவேகானந்தரும், காந்தியடிகளும் பட்டினியால் வாடும் ஏழையிடம் முறையே கடவுளைப் பற்றியும், சுதந்தரத்தைப் பற்றியும் பேசமாட்டோம். அவர்களுக்குக் கடவுள் கஞ்சியின் வடிவில், ரொட்டியின் வடிவில் தான் காட்சியளிப்பார் என்று கருதியது போல டாக்டர் மு. வ. அவர்களும் சமுதாயம் புரையோடிப் போயிருப்பதற்குக் காரணம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்தாம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார்,
"களவு ஒழிய வேண்டுமானால் நாட்டில் வறுமை இல்லாதவாறு செய்யவேண்டும். ஒருபுறம் முப்பது ரூபாய்ச் சம்பளமும் மற்றொரு புறம் முப்பதாயிரம் ரூபாய் வருவாயும் உள்ள மிக இழிவான நிலையைப் போக்கவேண்டும். ஆயிரம் மடங்கு உள்ள வேறுபாட்டை அகற்றி, இரண்டு மூன்று பங்கு வேறுபாடு தான் என்ற நிலைக்குக் கொண்டு வரவேண்டும்... இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும் வாழ்வு உண்டு, வளம் உண்டு என்ற நல்ல நிலைமை ஏற்படுத்த வேண்டும். இந்த மண்ணின் மதிப்பு உயர்வதற்கு அதுதான் தக்க வழி"
என்கிறார். மேலும் அவர்,