பக்கம்:அறவோர் மு. வ.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

203

  • மூன்றாவது, சுற்றுப்புறம். அது நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தினார்கள். மூடநம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தினார்கள். உண்மையின் அடிப்படை இல்லாமையால் அவை உறுதியாக நிற்கவில்லை. இன்று சுற்றுப்புறமும், நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை.
  • கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்தவேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்யவேண்டிய கடமை களைக் கைவிடாதே, ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்ப துன்பமே உன் இன்ப துன்பம்; இன்ப துன்பம் மட்டும் அல்ல, ஆக்கமும் அழிவும் கூட இருவர்க்கும் பொதுவாகக் கருத வேண்டும்; கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சிவேண்டும்.
  • யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அல்லது, ஒத்த உரிமை யோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும்.
  • கடவுளுக்குப் பலகாரங்களை அடுக்கி வைத்து வழிபடுவது கூடாது என்றே சொல்லுவார். சிறுவர்கள் எந்தப் பொம்மையாவது வைத்துக்கொண்டு விளை யாடலாம்; ஆனால் புத்தர் சிலையை வைத்துக் கொண்டு விளையாட விடலாமா? இதைப் பார்த்துக் கொண்டிருக்க மனம் வருமா! அதுபோல் மனிதர் தம் நாக்கின் ஆசைக்காக எவ்வளவு தின்பண்டங்களையாவது செய்து தின்னட்டும்; ஆனால் கடவுளுக்குத் தேவை என்று படைத்துப் பூசை செய்வது, சமயத்தையே கீழ்நிலைக்குக் கொண்டு வரும் குற்றம் என்று சொல்வார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/206&oldid=1224449" இலிருந்து மீள்விக்கப்பட்டது