பக்கம்:அறவோர் மு. வ.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அறவோர் மு. வ.



  • எல்லாரும் உலகத்தைத் திருத்த முயல்கிறார்கள். உள்ளத்தைத் திருத்த அவ்வளவு முயல்வது இல்லை. செய்ய முடிந்ததைச் செய்யாமல் முடியாததற்காக உழைத்துச் சலிப்பும் வெறுப்பும் அடைகிறார்கள்.
  • மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில் அந்தியின் அழகும் உண்டு; காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு: நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு; ஆழ்ந்த கடல்களும் உண்டு; அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; வெப்பமும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; பனியும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகை அல்லவா காணவேண்டும்; ஆராயவேண்டும்; பாடவேண்டும்; பண்படுத்த வேண்டும்.
  • உடம்பில் அழுக்கு ஏற்படுகிறது; பிறகு குளிக்கிறோம். உள்ளமும் அப்படித்தான். தூய எண்ணங்களில் அடிக்கடி குளித்துக் கொண்டிருக்கவேண்டும்.
  • நம் நாட்டிலேயே கடமையுணர்ச்சி குறைவு. மேலே இருப்பவர்களுக்கு நடுநிலைமையுணர்ச்சி இல்லை. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு தான் உண்டு. அதனால்தான், மனித சக்தி இவ்வளவு இருந்தும், இயற்கையின் துணை இவ்வளவு இருந்தும், மண்ணின் பரப்பு இவ்வளவு இருந்தும், இந்த நாடு முன்னேற முடியாமல் இருக்கிறது.
  • உலகம் பரந்த உலகம். எல்லோருக்கும் இங்கே இடம் உண்டு. அவரவர்கள் தங்களுக்குப் பொருத்தமான இடம் தேடிக் கொண்டு வாழ்வதே நல்லது. பறவை களும் விலங்குகளும் இப்படிப் பொருந்தாத இடத்தை விட்டு நீங்கும் உரிமை பெற்றிருப்பதால்தான் மகிழ்ச்சி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/207&oldid=1224452" இலிருந்து மீள்விக்கப்பட்டது