பக்கம்:அறவோர் மு. வ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறவோர் மு. வ.


வோம். அங்கங்கே நல்ல விதைகளைத் தூவிச் செல்வோம். அதுவும் இயலாத நிலையானால் இயன்ற வரையில் நிலத்தைப் பண்படுத்திவிட்டுச் செல்வோம். அது நம் கடமை. நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை.”
-மண்குடிசை, பக். 504

சமுதாயம்

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த சமுதாயச் சிந்தனையாளர். அவர் சிந்தனை சமுதாயச் சிக்கல்களைத் தீர்ப்பதிலேயே ஆழ்ந்து கிடக்கிறது. எனவேதான் அவர்தம் இலக்கியங்கள் சமுதாயச் சிக்கல்களையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. சமுதாயச் சிக்கல்களைச் சிந்தையில் கொண்டு அவற்றைத் தீர்க்கும் நெறிகளை வெளிப்படுத்துபவர்களாகவே அவர்தம் இலக்கிய மாந்தர்கள் காட்சி தருகின்றனர். மு. வ. அவர்களின் நாவல்களுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவினையும் உரிமையினையும் பற்றி டாக்டர் இரா. தண்டாயுதம் அவர்கள்,

"டாக்டர் மு. வ. வின் நாவல்களையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவே இயலாது. மிக மேலான அறிவு நிலையில் நிற்கும் சான்றோரா யினும் சமுதாயத்தை எவ்வளவு கூர்த்த விழிகளோடு இவர் நோக்குகிறார் என்பதை இவருடைய நாவல் களே தெளிவாகக் காட்டும்"
-தற்காலத் தமிழ் இலக்கியம், பக். 39

என்கின்றார்.

டாக்டர் மு. வ. அவர்கள் சிறந்த சமுதாய மருத்துவர். ஒரு மருத்துவர் நோயாளியின் உடலை நன்கு சோதனை செய்து அவன் உடல் நோயை அறிந்து கொள்வது போல மு.வ. அவர்களும் சமுதாய அமைப்பை - அதன் நோய்களை நன்கு தெளிந்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/23&oldid=1236317" இலிருந்து மீள்விக்கப்பட்டது