டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
23
- கரித்துண்டு, பக். 57
சமுதாயத்தின் குறைகளைக் கண்டு நெஞ்சம் குமுறி அவற்றை நிறைவாக்க வழிவகுத்துக் கொடுக்கும் இப் பகுதிகள் அனைத்தும் அவரைச் சிறந்த அறவோராக அன்றோ உணர்த்தி நிற்கின்றன. சமுதாயச் சிக்கல்களையும் தீர்வுகளையும் காண்பதோடு அமைந்து விடாமல் நல்லதொரு சமுதாயம் காணவும் விழைகின்றார். எனவே இன்று உள்ள சமுதாயம் அழிந்து புதியதொரு சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பது இவர் கருத்து.
- பெற்றமனம், பக். 141-142
இப்படிப் புதியதாக அமைக்கும் சமுதாயத்தினை,
"வயிறு வளர்ப்பது பற்றியும் குடும்பம் வாழ்வது பற்றியும் கவலை இருக்கக்கூடாது. உழைக்கக் கையும் காலும் இருந்தாலும் உயிர் வாழ உரிமையும் உண்டு என்ற நிலை நாட்டில் ஏற்பட வேண்டும். பிறந்தவர்கள் எல்லோரும் ஏதாவது தொழில் செய்து பிழைக்க முடியும் என்ற கட்டாயப் பொருளாதார நிலைமை ஏற்பட வேண்டும். இப்போது கட்டாய வயிறு, கட்டாயக்குடும்பம்,