24
அறவோர் மு. வ.
கட்டாயக் கல்வி, கட்டாய இராணுவம் என்று என்னென்னவோ இருக்கின்றன. ஆனால் கட்டாய உணவு, கட்டாயக் குடும்பம், கட்டாய உடை, கட்டாய வீடு, கட்டாயப் பொழுது போக்கு, கட்டாய உழைப்பு என்ற அமைப்புகள் வரவில்லை. அதனால்தான் எப்படியாவது வாழ வேண்டும் என்ற கவலை ஒவ்வொருவரையும் வாட்டுகிறது. எப்படியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ள சமுதாயமாக அமைக்க வேண்டும்" (கயமை, பக். 105-106) என்று கூறுகின்றார். இன்னனம் சமுதாயத்தில் புதிய மாறுதலை ஏற்படுத்த விரும்பும் அவர் அச்சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள் என்ன என்பதையும் கூறிச் செல்கின்றார். சமுதாய வளர்ச்சிக்குத் தூய அன்பு, அறிவின் தெளிவு, தூய உடல் ஆகிய மூன்றும் இருந்தால் போதும் என்று மொழிகின்றார்.
-வாடா மலர், பக். 231
சமுதாய வளர்ச்சிக்குத் தேவைப்படும் இம்மூன்றன் தன்மைகளையும் கூட டாக்டர் மு. வ. விளக்கிச் செல்கின்றார். அன்பின் தேவையை,
என்பதனால் உணர்த்துகின்றார்.