பக்கம்:அறவோர் மு. வ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

25

என்பதை உணர்ந்தவர் - உணர்த்தியவர். வாழ்க்கையில் விழிப்பினை ஏற்படுத்தும் ஆற்றல் அறிவிற்கு உண்டு என்பதை,

"அறிவு வளர வளர வாழ்க்கையில் விழிப்பும் தயக்கமும் மிகுதியாகின்றன."

என்பதன் மூலம் உணர்த்துகின்றார்.

அடுத்ததாக அவர் கருதுவது உடல். இந்த உடல் தூய்மையானதாக நோயற்றதாக இருத்தல் வேண்டும். நோயற்ற உடலையே அவர் தூய உடலாகக் கருதுகின்றார். மனித உடல் நோய்களுக்கு ஆட்படும் நிலைக்குக் காரணம் நெடுநேரம் உட்கார்ந்திருப்பதே என்பது அவர் கொள்கை.

"நெடுநேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கும் உயிர் வேறு எதுவும் இல்லை. பறவையும் இல்லை. விலங்கும் இல்லை. மனிதர் மட்டுமே நெடுநேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அதனால்தான் மனிதர்க்கு மட்டும் நோய்கள் பல ஏற்படுகின்றன. பறவை விலங்குகளுக்கு அவ்வளவு நோய்கள் இல்லை."
- மண்குடிசை, பக். 93
"உட்கார்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் உடம்புக்குக் கெடுதி".
- மண்குடிசை, பக். 93

உட்கார்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்தியவர், உணர்ச்சி வசப்படுவதாலும் அது பாதிக்கப்படும் என்பதை, "விருப்பு வெறுப்பு உணர்ச்சிகள் பொல்லாதவை. உணர்ச்சி உடல் உரத்தைக் குறைத்து விடும். ஆகையால் என்ன காரணத்தாலும் உணர்ச்சி வயப்படக்கூடாது" (மண்குடிசை, பக். 234) என்பதனால் தெளிவுறுத்துகின்றார். எனவே மனிதன் நோய் குறைந்த உடம்பும் கவலை குறைந்த மனமும் பெறுவதற்கு வழி தேட வேண்டும் என்று மொழிகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/28&oldid=1234757" இலிருந்து மீள்விக்கப்பட்டது