பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. அண்ணா ஒரு கடல்!


வானத்தின் பிரதிபலிப்பால் அது நீல நிறமாகி இருந்தது!

சிரித்துக்கொண்டு அதன் மீது விளையாடும் அலைகளால், அதனைக் கடலென்றே மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

தேங்கியிருக்கும் குட்டையும் - கடலும், பூமியில்தான் இருக்கின்றன. குட்டைக்கு அலைகள் இல்லை; கடலுக்கு அலைகளுண்டு. இதற்குக் காரணமென்ன?

நாட்டைத் திருத்துவதற்காக நல்லவர்களிலே சிலர், கசப்பான உண்மைகளை, அவ்வப்போது வெளியிடுவார்கள்.

வானம் போன்ற உயர்வு, அத்தகைய மனித மேதைகளைக் காதலிக்கும். கடலையொத்த ஆழமான உணர்ச்சி, அந்த வானத்தைத் தாவித் தாவிக் குதிக்கும்.

இவை விஞ்ஞான அடிப்படையிலே எழுந்த உண்மைகளாகும். இந்த உலகம், இளகி - இறுகும்போது - முன்பு, தேக்கி வைத்துக் கொண்ட முதல் சொத்து கடல்.

தரணி, இடைக்காலத்திலே யாரோ ஒரு மனிதனாலே, கண்டுபிடிக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவமல்ல; இயற்கையின் அடிப்படைத் தத்துவமாகும்.

இன்றைய ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு கட்சி; நாட்டை ஆட்சி செய்கிறது.