பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



பல கோடி மக்களின் நலனுக்காகப் பாடுபட உலகில் தோன்றிய எந்தத் தலைவனும், துன்பச் சூட்டைத் தானே உறிஞ்சி, எப்படி - கடல் செடி, தனது குளுமையான இலைகளை மீன் குஞ்சுகளுக்கு இரையாக்கி விடுகின்றதோ, அப்படித் தன்னைப் பொதுமக்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றான்.

கடல் செடி, நீரின் சூட்டை உறிஞ்சுவதற்கும் - தன்னையே மீனுக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதற்கும் உருவானதைப் போல, அறிஞர் அண்ணா அவர்கள், தன்னைப் பொது மக்களுக்கு அர்ப்பணித்தும்- அவர்களது துன்ப வேக்காட்டைத் தானுறிஞ்சிக் கொண்டும் வாழ்கிறார்.

கடலடியில் இருந்த எனது கண்கள், கொஞ்சம் தொலைவில் தங்க மூலாம் பூசியத் தகடாக மின்னிக் கொண்டிருந்த ஒரு பனி மலையின் மீது பதிந்தன.

கடலின் மேற்பரப்பில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் திங்கள் - அந்தப் பனிமலை மீது தனது கவனத்தை, தன் கதிரை செலுத்திய காரணத்தால் - அந்தப் பனிமலை, தங்கக் குவியலாக எனக்குத் தெரிந்தது.

அதனின் உச்சி, கடலின் மேற்பரப்பில் இருக்கிறது. அடிவாரத்தில்தான் நான் இருக்கிறேன்.

அந்த மலை - உலகம் தோன்றியதற்குப் பிறகு - பல கோடி நூற்றாண்டு இடையறாது பெய்த மழையின் காரணத்தால் உருவான கடலில், எப்படி வந்திருக்க முடியும்?

அந்த மலை, கடல் தோன்றுவதற்கு முன்பே உருவானதா? அல்லது கணக்கிட முடியாத அளவிற்கு வெப்பத்தைக் குறைத்துக் கொண்ட குளிர் காலத்தால் - நீர் இறுகிப் போனதால், ஆனதா? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிமலையின் தோற்றம், அந்த அமைதியான கடலில் -

சூட்சமத்தால் தொங்கும் மணியைப் போல, ஆடிக் கொண்டிருக்கிறது.