பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

83



தலைமகனே வருக வருகவென்று பள்ளுபாடிற்றே!

அன்னைக் குலம் ஆரத்தி எடுத்து அகமகிழ்ந்தனவே!

அன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன; உமது அழகூட்டும் அணாருக்கு.

சிறுவர்கள் இனிப்பு வழங்கினர்;

வெடித்த எரிமலையோ - பிளந்த பூகம்ப எதிரொலியோ என்று; மக்கள், 'அண்ணா வாழ்க'; என்ற வீரமுழக்கமிட்டனர்!

அந்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் - மூக்கின் மீது விரல் வைத்தனர்!

புருவத்தை மேலேற்றினர்; புல்லரித்த மக்கள்!

உம்மை வரவேற்க - இன்முகங்காண; அமுத சொற்களைக் கேட்க, எமக்குள் எத்துணைப் போட்டி அண்ணா!

பரி பூட்டிய தேரிலே; தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்!

உதயசூரியன், வானவீதியிலே உல்லாச பவனி வருவதைப் போல, காட்சியளித்தீர்!

'அடடா...வோ! அண்ணாவின் தலைமுறையிலே வாழ எடுத்த பிறவியே பிறவி என்று, எம்மை யாமே, ஏற்றிப் போற்றிக் கொண்டோமே!

மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட முடியுமா?

உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா?

விழா என்ற பெயரிலே விண்ணிலே வேலியமைத்தவர்களைத் தமிழகம் கண்டது:

உயிர், இவர்களிடம் உத்திரவு பெற்றுப் போவதைப் போல, அதையும் கட்டுகின்றோம் என்றார்கள்:

நாங்கள் அத்தகையச் செயல்களை நாடவில்லை!