பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

139



உன் பெருமையை, சக்தியை, அறிந்தவர்கள் போற்றுகிறார்கள்! புகழ்கிறார்கள்!

காயந்துபோன மூங்கிலில், தென்றலே, நீ தழுவி நாதத்தை எழுப்புகிறாய்!

மொழியுணர்வு மரத்துப் போனவர்கட்கு, மொழியுணர்ச்சியை உண்டு பண்ணத்தான் என்று, நான் எண்ணுகிறேன்.

"தென்றலாகிய என் இனிமையைப் பெற்று மரம் கூட தமிழிசை எழுப்புகின்றபோது, இந்த மனித மரங்கட்கு அந்த உணர்வும் இல்லையே! அவர்கட்கு இதை அறிவுறுத்தத்தான் என்பது, நான் உன்னிடம் கற்ற அரசியல் பாடமாகும்!

யானை தன் கனவில் சிங்கத்தைக் கண்டால் அலறும்!

அறப்போர் வீரர்கள் அரிமா போன்றவர்கள்.

ஆட்சியாளர் யானையை நிகர்த்தவர்கள்!

அந்த யானை, மொழிப் போர் என்ற வெம்மைக்கு உட்பட்டிருந்தாலும், தன் அடி தொண்டையிலிருந்து உமிழ் நீரை வெளியேறச் செய்து, தனது உலர்ந்த நாவை நனைக்க முயற்சிக்கிறது. ஏன்?

ஒதிய மரம் போன்ற மனிதர்களின் மொழி உணர்வற்ற பண்பால்தான்; காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத் துரோகத்தால்தான்.

இந்த மொழித் துரோகிகட்கு, தாய் மொழியுணர்ச்சி இல்லை என்பதை, நீ அறிந்த ஒன்றுதானே!

அதனால்தான் தாய்மைப் பண்பு பெற்ற முதிர்ந்த தென்னை மரத்தின் மீது நீ தழுவினாயா?

தாய்மைப் பண்பு தலைசிறந்த பண்பு. எல்லாரையும் பேதமற்ற நிலையில் காத்துப் பேணும் பண்பு.

அந்தப் பண்புக்குரிய தெங்கை, நீ தழுவியது ஏன்? அறிவேன் நான்!