பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




தெங்கு, சிறு கன்றாக இருக்கும்போது உண்ட வானமுதை, என்றைக்குமே தேக்கி வைத்து, பசியெடுக்கும்போது தனது உரிமையாளனுக்கும், மற்றவர்கட்கும் பேதமின்றி இளநீரையும் தேங்காயையும் தந்து உதவுகிறது. இது தாய்மைப் பண்புகளுள் ஒன்று என்பதனை நீ உணர்ந்தாய் போலும்!

அதனால்தான், அத்தகைய முதிர்தெங்கின்மீது தவழ்ந்து, அந்தத் தாய்மை உணர்ச்சியை - பண்பைத் - இந்த துரோக உள்ளங்கட்கும் ஊட்டினாயா?

தாயான தெங்கிற்குச் சேய், சிரிக்கும் அதன் இளம்பாளை.

அந்தப் பாளையிலே வழிந்தோடும் "சேய்மை" அழகை நீ சுவைத்து, அந்த மகிழ்ச்சிக் களையை - இந்த மொழித் துரோகிகட்கும் - உணர்த்த - அன்பூட்ட விரும்பினாயோ?

தாயிற்கு ஏற்பட்ட மானத்தைத் தடுப்பது சேயின் கடமை என்பது உலகுக்கும் - இந்த துரோகிகட்கும் அறிவு உணர்த்தத்தான், அந்த இளம்பாளையை, தென்றலே நீ தழுவி - நாட்டிற்கும் தழுவ விட்டாயே!

அடடா, தென்றலே.! உன் சேவையே சேவை! மக்களுக்காக நீ ஆற்றும் தொண்டே, தொண்டு!

சமுதாயம் அறிவுபெற உணர்வுற - தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ எங்கெங்கெல்லாம் நீதிநெறிகள் தவழ்ந்தாடு கின்றனவோ, அங்கெல்லாம் நீ சென்று, அவற்றை எமக்கு அளிக்கிறாயே!

உனக்கு என்ன கைம்மாறு செய்வோம், வாழ்க என்ற வளமான சொல் ஒன்றைத் தவிர!

தென்றலே! தமிழ்த் தரணியின் அணுவிலெல்லாம் நீ தவழ்ந்து, அற நெறிகளை ஏற்று, மாலை நேரமானதும் தமிழக வீதிகளை நோக்கி ஓடி வருகிறாயே, ஏன்?

அதை நான் உணர்கிறேன் - நாடும் அறிகிறது! இருந்தாலும் உன் புகழையன்றோ எழுத முனைந்து விட்டேன்.