பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




கிரணமாலி; நீ; கிரணத்தை ஆக்குபவன்! ஏழ்பரியோன்;எழுகின்ற காரணத்தால்.

வேந்தன்; உலகை நீ ஆளுவதால்.

விருச்சிகன்; சுடரவிழ்க்கும் தலைவனானதால்!

விண்மிணி, உயிர்களுக்கே நீ கண்மணி!

அருக்கன், வாழ்க்கைச் சுடரை உலகிற்கும் பெருக்குவதால்!

அப்படியானால் நான் யார்?

எங்கோ முளைத்தவனோ? எதற்கோ வந்தவனோ? நானே அதை அறிய முடியவில்லை!

பரிதி வட்டமே! என்னை உனக்காக்கிக் கொள்ள வேண்டும். இழந்த எனது உரிமைகளை மீண்டும் எனக்கு வழங்க, உனது கதிர்காமத்தில் திட்டம் தீட்டுவாயா!

சாம்பல் நிற மேகங்களுக்கு இடையில், உனது சாம்ராச்சிய அழகைப் பைத்தியம் பிடித்த மின்னல்கள் - இந்த பூமியை நேர்க் குத்தலாகக் கிழிக்கும்போது, என் தமிழ் நெஞ்சத்தை இந்தி மொழி தாக்குவதைப் போல் இருக்கிறது!

தொட்டிலிலே எனது தாய், தாலாட்டு பாடிய பாட்டுகள், நீ அறிந்தமட்டில் தமிழ்தான் என்பது தெரிந்ததல்லவா?

வரையறுக்கப்பட்டத் தமிழ்ப் பண்பாட்டில் விளையாடுகின்ற என் மூச்சை, குறை நாளுக்கு என்னை இரையாக்க வேண்டாம்.

வேதத்தின் ஒளிக்குக் கட்டுப்படாத என் மனமும் கூட, தமிழ் நாதத்தில் துவண்டுபோனதை நீ அறிந்திருப்பாய்!

என் விரோதிகளின் கூர்மையான வாள், எனது தசைகளைக் கிழித்திருக்கின்றன!

ஆனால், அதே வாட்கள், எனது தமிழைத் துளைபோட முடியாமல், தாகத்தால் தவித்தவனைப் போலத் தவித்திருப்பதை நான் கண்டேன்.