புலவர் என்.வி. கலைமணி
151
நீண்ட கிளைகளை வைத்திருக்கின்ற குள்ளமான மரமா நீ! நெடிய சாம்ராச்சியத்தை ஆளுகின்ற உருவமா நீ?
சிறிய அலகைக் கொண்டு பெரிய இசையைப் பாடிடும் குயிலா நீ!
செட்டான உருவம் கொண்ட முத்தா நீ?
அடங்கிக் கிடக்கும் பெரும் பகையா?
ஒடுங்கிக் கிடக்கும் பேராற்றலா?
கட்டுக் கடங்கிய கடலா?
உன் சக்தி எது? நீதனிமையானால், கவிதைகளுக்கு இசையா?
நீ தூய்மையானால் ஞானத்தின் ஊற்றா?
நீ அன்பானால் அடிமைப்படுத்தும் முயற்சியா?
நீ அணைப்பானால், நான் உன்னுள் அடங்குபவனா?
வித்தைகள் செய்கின்ற நீ, எங்கிருந்து வந்தாய்? இருந்தாய்?
திராட்சையின் இனிமையில் இருந்தா? பாட்டின் அடிப்படையில் இருந்தா?
என் தாயின் பாசத்தில் உலகத்தை வாழவைக்கும் உதயசூரியனே! உன்னை இன்னொன்று கேட்கிறேன்.
ஓசை விம்ம காற்றுக்கு ஒரு பாட்டு உண்டு. அப்பாட்டுக்கும் ஓர் கனவு உண்டு.
அக் கனவு எழும் இடத்தைத்தான் கவிஞனுக்கு ஏற்ற இடம் என்று சொல்வார்கள்.
என் உறவே, ரத்தத்தைச் சூடேற்றும் உணர்ச்சியே, அந்த இடத்தில் இருந்தா வந்தாய்? உன்னுடைய ரதம் அங்கேயா இருக்கிறது?
நடை தளர்ந்த நாள் செத்துவிட்டது! புதிய இரவு பூத்து விட்டது!