பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அனைத்து வரிகளும்
வண்ணத் தமிழ் பிலிற்றும்
வாசத் தேன்!
எத்துணை
உவமைகள்;
எத்துணை
உருவகங்கள்:
எத்துணை
சித்தாந்தங்கள்;
எத்துணை
வேதாந்தங்கள்?

தொட்ட இடங்களிலெல்லாம்
தத்துவப் பாதாகைள்
பட்டொளி வீசித் -
தகத்தகாயமாகப் பறக்கின்றன!

வரிக்கு வரி....
வரிக்குதிரை போல்
தென்ளு தமிழ்
துள்ளு நடை
போடுகிறது - நம்
நெஞ்ச வீதியில்
உலா வந்து -
நர்த்தனம்
ஆடுகிறது!

கடந்து
உள்ளிருப்பவனைக்
கடவுள்
என்கிறோம்

இவரைக்
கடந்து

உள்ளிருப்பதால் -