பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



அந்த நிலா, ஒப்பற்ற ஒளிப் பிழம்பு.

தெளிவுக்கு இலக்கணம் அது.

இந்த ஒளியால் அதனைத் தீண்டியவர்கள். ஒரு போதும் இருளில் இருந்ததில்லை.

காணாமல் போன தனது சீவனைத் தேடிக்கொண்டு அலைபவன்கூட, அந்த நிலவொளியில், காட்டோரத்தில், கண்கலங்கி கொண்டிருக்கும் சீவனைக் கண்டுபிடிக்கிறான்.

உறவு முறைகள் - பழுதுபட்டு அங்கங்கே உதிர்ந்து போகிற நேரத்தில், அந்த ஒளியால் சிதறியதை, மனிதன் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியும்.

நெடுந்தூரத்திலிருந்து, ஒளி கொடுக்கின்ற சூரியனிடமிருந்து, சூடு வருகிறது.

ஆனால், நெடுந்தூரத்திலிருக்கின்ற நிலாவிடம் இருந்து - சூடு வருவதில்லை.

இந்த வித்தியாசம் ஏனென்று, புரிகிறதா?

உலகத்தில் சிலர், அணுகுகிற நேரத்தில் கொதித்துக் கொண்டுமிருப்பார்கள் - குளிர்ந்து கொண்டும் இருப்பார்கள்!

மனிதன், விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவனுக்குச் சூரியனையும் - உழைத்து, அலுத்த நேரத்தில், அலுப்புக் கேற்றபடி நிலாவையும், நான் படைத்தேன்.

நிலா, கடலைக் கூத்தாடச் செய்கிறது.

நிலவுக்கு, இந்த உலகத்தைத் தூங்க வைக்க முடியும.

தனது வாழ்நாளை இந்த உலகம், நிம்மதியில் கழிக்க வேண்டுமென்பதற்காக, கோடிக் கணக்கான தாரகைகளோடு, வருகின்ற பெரிய உள்ளம் படைத்தது நிலா.

சூரியனுக்குக் கை எடுப்பதுபோல, நிலவுக்குக் கையெடுக்க - இந்த சமுதாயம் ஏன் மறுக்கிறது?

அதிலே, ஓர் இரகசியம் இருக்கிறது!